குஜராத் விமான விபத்து; 204 பேர் உயிரிழந்ததாக தகவல்!
இதுவரை வெளியான தகவலின்படி, குஜராத் விமான கோர விபத்தில் 204 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் போயிங் 787-8 டிரீம்லைனர் விமானம் இன்று விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை வெளியான தகவலின்படி, இந்த கோர விபத்தில் 204 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் விழுந்த பகுதியில் மருத்துவ கல்லூரி மாணவர்களின் விடுதி அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த விபத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை செயலாளர் தனஞ்செய் திவேதி தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண, உறவினர்களின் டி.என்.ஏ.வை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.