வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி படு ஜோராக நடந்த விபச்சாரம்.!

Loading

கேரளாவில் வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம் , கோழிக்கோடு மலப்பரம்பு ஐயப்பாடி சாலையில் பிரபல ஆஸ்பத்திரிக்கு அருகாமையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய கிடைத்தது. இதனையறிந்த போலீசார், அந்த குடியிருப்புக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு விபசாரம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில் அவர்கள் கூறியது:விபசாரம் நடத்த “வாட்ஸ் அப்-ல் குழுவை உருவாக்கி அதில் அழகிகளை தேடிவரும் தங்களின் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தங்களிடம் இருக்கும் அழகிகள் அவர்களுடன் உல்லாசமாக இருப்பதற்கான பணம் உள்ளிட்ட விவரங்களை குழுவில் இருக்கும் வாடிக்கையாளர்கள் பார்த்து அறிந்து கொள்வார்கள்.

பின்பு அழகிகளுடன் உல்லாசமாக இருக்க வரவேண்டிய நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்ககளையும் அறிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சென்றுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் விபசாரம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் மருத்துவ மனையில் சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகளின் உறவினர்களான ஏராளமானோர் அவர்களும் இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் விபசார அழகிகளுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.விபசார கும்பலின் “வாட்ஸ் அப்” குழுவில் நோயாளிகளின் உறவினர்களே அதிகளவில் இருக்கின்றனர் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

0Shares