அதிக அளவில் நாற்றங்கால்களை உற்பத்தி செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது குன்னூர் எடப்பள்ளி ஊராட்சியில் உற்பத்தி நாற்றங்கால் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடப்பள்ளி ஊராட்சியில், உற்பத்தி நாற்றங்கால் செய்யும் பணிகளை பண்ணையில் மாவட்ட மரக்கன்றுகள் ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் செய்தியாளர்கள் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம்தெரிவித்ததாவது:-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலம் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில், பசுமை தமிழ்நாடு இயக்கம் எனும் செயல்பாட்டின்கீழ், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துடன் ஒருங்கிணைந்து காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவினை அதிகரிக்கும் செயல்பாடுகளை மேற்கொள்ள அதிகளவிலான மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள கடநாடு ஊராட்சிக்குட்பட்ட சின்னகுன்னூர், எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட எடப்பள்ளி, அண்ணாநகர் மற்றும் மசினகுடி நடுஹட்டி ஊராட்சிக்குட்பட்ட பெட்டட்டி ஊராட்சிக்குட்பட்ட மசினகுடி பகுதிகளில், வட்டார நாற்றங்கால்கள் மற்றும் மகளிர் குழுக்களால் பராமரிக்கும் கூடுதல் வட்டார நாற்றங்களால்கள் அமைக்கப்பட்டு, விக்கி, நாவல், கொய்யா மற்றும் ஜெகரண்டா போன்ற பல வகையான மரக்கன்றுகள் சுமார் 80,000 உருவாக்கப்பட்டு, அதில் சுமார் 27,000 நாற்றுக்கள் பல்வேறு ஊராட்சிகளில் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மீதி சுமார் 53,000 மரக்கன்றுகள் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள நாற்றங்கால்களில் பல்வேறு நிலைகளில், நடவு செய்ய தயார் நிலையில் உள்ளது.மேலும், நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடப்பள்ளி ஊராட்சியில், நாற்றங்கால் செடிகளை அதிக அளவிலான நாற்றுக்களை உற்பத்தி செய்யுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இச்செய்தியாளர் பயணத்தின்போது, குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், விஜயா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

0Shares