என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்..விழிப்புணர்வு வழங்கிய யாசின் அறக்கட்டளை!

Loading

யாசின் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற விழிப்புணர்வு வழங்கப்பட்டன.

கடலூர் மாவட்டம் சி.என்.பாளையம் யாசின் அறக்கட்டளை சார்பில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், வேலைவாய்ப்புகளை பெற என்ன திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். போன்ற விழிப்புணர்வு, மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.

மற்றும் நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம், பாலூர்,பத்திரக்கோட்டை ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் இரண்டு மாணவர்கள் மற்றும் புதுப்பாளையம், கீழ்மாம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் இரண்டு மாணவர்கள் உட்பட அனைவரையும் ஊக்கப்படுத்தி நினைவு கேடயம், பரிசு வழங்கியத்துடன், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி மாணவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டது. மற்றும் கல்வி சேவையாற்றுபவர்களை கௌரவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிராஜூதீன், யாசின் அறக்கட்டளை நிறுவனர் வரவேற்புரை யாற்றினார்.சாந்தகுமாரி,தலையைஆசிரியர்,அரசுமேல்நிலைபள்ளி,நடுவீரப்பட்டடுதலைமைதாங்கினார்.செந்தில்குமார்தணிகாசலம்,ஜெயபால், ஷீலா மேரி, செல்வகுமார், அரங்கநாதன், லட்சுமி ஆகிய ஆசிரியர் பெருமக்கள் மற்றும் இஸ்மாயில், ஸ்ரீரங்கன் பிரகாஷ், ஜாபர், அக்பர், கமல், குணசேகரன், சலிம், ஆகிய பிரமுகர்கள்சிறப்பழைப்பாளர்கள் முருகன், நடுவீரப்பட்டு, காவல் உதவி ஆய்வாளர் குமரவேல் சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்கள்கல்வி ஆலோசனை சித்திக் விஸ்டம் கல்வி வழிகாட்டி மையம்,சென்னை கலந்து கொண்டனர்

அப்துல் ரஹ்மான்.இந்நிகழ்ச்சிக்கு முகமது வசீம், பஷீர், தாரிஸ்தீன், ஷாரூன், சமீர், ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்கள்.

0Shares