போதை பொருள் வழக்கு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள்..SP எச்சரிக்கை!

Loading

போதை பொருள் வழக்கு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் பொறுப்பு எடுத்து கொண்ட மருத்துவர் ஸ்டாலின் பொது மக்கள் மீதும் இளைய சமுதாயத்தின் மீதும் அக்கறை எடுத்து கொண்டு பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

முக்கியமாக கஞ்சா இல்லாத கன்னியாகுமரி என்ற ஒற்றை குறிக்கோளுடன் கஞ்சா விற்போர் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு (2025) மட்டும் இதுவரை மொத்தம் 131 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து106 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்துள்ளது.

256 பேர் கைது செய்து அதில் நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் வழக்கு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

0Shares