நெடுங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய பரிசோதனை கூடம்..MLA சந்திர பிரியங்கா திறந்துவைத்தார்!
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டியுள்ள பரிசோதனை கூடத்தை சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா திறந்துவைத்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் மேல்நிலை பள்ளி பயிலும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதுச்சேரி அரசு வருடம் தோறும் இலவச மிதி வண்டிகளை வழங்கி வருகிறது, அந்த வகையில் இந்த ஆண்டு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு கோட்டுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்
மாண்புமிகு மக்கள் முதல்வர் N.R ஐயா அவர்களின் நல்லாசியுடன் புதுவை அரசு காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தரமான விலை உயர்ந்த (Lady Bird )மற்றும் (Hero) சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. Dr.சந்திர பிரியங்கா அவர்கள் கலந்துகொண்டு சைக்கிள் வழங்கினார்.
மேலும் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிதாக கட்டியுள்ள பரிசோதனை கூட்டத்தை திறந்து வைத்து மாணவ மாணவியர்களுக்கு சீருடை வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மாணவ மாணவியர்கள் மற்றும் N.R காங்கிரஸ் பிரமுகர்கள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.