97 ஆண்டுகால குடும்பப் பாரம்பரியத்தைக் கொண்டாடியது ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் குழுமம்!
ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் குழுமம் 97 ஆண்டுகால குடும்பப் பாரம்பரியத்தைக் கொண்டாடியது.இதில் விளம்பரத் தூதராகிய திரைப்பட நடிகர் அரவிந்த்சாமி கலந்து கொண்டார்..
பாரம்பரியம், உருமாற்றம் ஆகிய இரண்டின் மைல்கல் கொண்டாட்டமாக, தென்னிந்தியாவின் நீண்டகாலமாக நீடித்து நிற்கும் நகை நிறுவனங்களில் ஒன்றாகிய ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் குழுமம் சென்னையிலுள்ள ஹோட்டல் தி லீலா பேலஸில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. இந்த நிகழ்வில் ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் குழுமத்தின் இயக்குனர்கள் மற்றும் இந்நிறுவனத்தின் விளம்பரத் தூதராகிய நடிகர் அரவிந்த் சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஏ.பி.எஸ். சஞ்சய், நிர்வாக இயக்குநர்“வளர்வது மட்டுமல்ல, பொறுப்புடன் வளர்வதற்கு வடிவமைப்பு, திறமை, தொழில்நுட்பத்தில் தொடர் முதலீடு செய்வது ஆகியவையும் முக்கிய காரணங்களாகும். எங்கள் வாடிக்கையாளர்களே எங்கள் குடும்பம், ஒவ்வொரு நாளும் அவர்களின் எதிர்பார்ப்புகளை தாண்டிச் செல்வதற்கு நாங்கள் பாடுபடுகிறோம்.”
ஏ.வி.ஆர். குறித்து விளம்பரத் தூதர் அரவிந்த் சாமி பேசுகையில்:“ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் என்பது வெறும் பெயரல்ல—அது ஒரு குடும்பம். இங்கு கிடைக்கும் அக்கறை, கலாச்சாரம், கைவினைத்திறன்—ஆகிய அனைத்தும் உண்மையானவை. இந்தப் பாரம்பரியத்துடன் இணைந்து பயணிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்என்றார்..