திமிரியில் பாஜக சார்பில் தேசிய கொடி ஏந்தி பேரணி!!

Loading

ராணிப்பேட்டையில் நம் நாட்டின் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தவும், நம் நாட்டின் வெற்றியை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக தேசியக்கொடி ஏந்திய ஊர்வலம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள திமிரி தேரடி நிலையத்தில் காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை வரவேற்கும் விதமாகவும், அதன் வெற்றியை கொண்டாடும் பொருட்டும் பயங்கரவாதிகள் மீது துணிந்து நடவடிக்கை எடுத்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கவும், நம் நாட்டின் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தவும், நம் நாட்டின் வெற்றியை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக தேசியக்கொடி ஏந்திய ஊர்வலம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்த பேரணியை திரங்கா யாத்திரிப் பொறுப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் தேசிய பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம், முன்னாள் பிரச்சார பிரிவு மாநில செயலாளர் ஏ டி மனோகரன், மாவட்ட பொதுச் செயலாளர் குணாநிதி, மாவட்ட பொது செயலாளர் சிவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசியக் கொடியை ஏந்திய பேரணியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், பல்வேறு அமைப்பினர், முன்னாள் ராணுவ வீரர்கள் என கலந்து கொண்ட இந்த பேரணி திமிரி தேரடி துவங்கி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே முடிவுற்றது.இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவர்கள் கோதண்டராமன் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் ஹரி ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares