கனமழை வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி!

Loading

பாகிஸ்தானில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, ராட்சர விளம்பர பலகைகள் விழுந்தது உள்ளிட்டவற்றால் பெண்கள், சிறுமிகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. நேற்று அங்கு இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பானது.பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக நங்கனா சாஹிப்,, ராஜன்பூர், ஹபிசாபாத், லாயா உள்ளிட்ட நகரங்களில்சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சூரைக்காற்று காரணமாக வீட்டின் மேற்கூரைகள், மின்சார கம்பங்கள், மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்து தூக்கி வீசப்பட்டன. இதனால் அங்கு மின்சார வினியோகம் தடைபட்டதுடன் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகின.

இந்நிலையில், பாகிஸ்தானில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, ராட்சர விளம்பர பலகைகள் விழுந்தது பெண்கள், சிறுமிகள் உள்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சுமார் 2,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0Shares