வெடி விபத்தில் உயிரிழந்த குடும்ப குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி!
வெடி விபத்தில் உயிரிழந்த குடும்ப குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி!
பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பெண் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவச கல்வி பெறுவதற்கான ஆணைகளையும் படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள் கற்றல் உபகரணங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் வழங்கினார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பெண் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவச கல்வி பெறுவதற்கான ஆணைகளையும் படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள் கற்றல் உபகரணங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, தனித்துனை ஆட்சியர் சுப்பிரமணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.