EPS பிறந்த நாள் விழா..2000 பேர்களுக்கு அன்னதானம்,நலத்திட்ட உதவிகள்!
EPS பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ,சட்டமன்ற உறுப்பினர் சத்யாபன்னீர் செல்வம், ஆகியோரால் 2000 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் , இனிப்புடன் கூடிய அன்னதானமும் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அஇஅதிமுக கழகப்பொதுச்செயலாளர் தமிழ்நாடு அரசு எதிர்கட்சித்தலைவர் புரட்சித்தமிழர எடப்பாடியார் அவர்களின் 71- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அறிவுறுத்தலுக்கிணங்க,கழக மகளிரணி துணைச் செயலாளர் பண்ருட்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாபன்னீர்செல்வம், ஏற்ப்பாட்டில்,
பண்ருட்டி திருவதிகை அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலில் நாட்டை காக்கும் இராணுவ வீரர்களின் நலனுக்காக சிறப்பு பூஜையும், கழகபொதுச்செயலாளர் நெடுய புகழுடன் நலமோடு நீடு வாழவும் வருகின்ற 2026 ஆம் ஆண்டில் கழக ஆட்சி அமைந்து எடப்பாடியார் முதலமைச்சராவதற்க்கும் கோ பூஜை, பள்ளியறை பூஜை, மூலவர் அபிஷேக தீபாராதனை பெரியநாயகி அம்மாள் அபிஷேக தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, நண்பகல் 12 மணியளவில், பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரில், விஜயா தியேட்டர் முன்புறம் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத், முன்னிலையில் முன்னாள் நகர மன்ற தலைவர் பன்னீர் செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாபன்னீர் செல்வம், ஆகியோரால் 2000 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் , இனிப்புடன் கூடிய அன்னதானமும் வழங்கப்பட்டது.
அவ்வமயம்,மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி கிளைக்கழக நிர்வாகிகள்,சார்பு அணி பொறுப்பாளர்கள், இந்நாள்,முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மகளிரணியினர், தொழிற்சங்கத்தினர், கழக முன்னோடிகள் செயல்வீரர்கள், வீராங்கனைகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள நிகழ்வு இனிதே நடைபெற்றது.