பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி தலையை துண்டித்து கொலை!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகர பாஜக மகளிர் அணி நிர்வாகியாக இருக்கும் சரண்யா திருமணம் முடிந்த நிலையில், கணவருடன் பட்டுக்கோட்டையில் வசித்து வந்தார்.
இந்நிலையில், தனது ஜெராக்ஸ் கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது சரண்யாவை மர்மக்கும்பல் கொலை செய்துள்ளது.
முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.