பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி காங்கிரஸ் நிர்வாகிகள்!
பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஈரோடு காங்கிரஸார் மெழுகுவர்த்திகள் ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.!
ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுகொள்ளப்பட்டவர்களுக்கு மெழுகுவர்திகள் ஏற்றிய நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை சார்பில் அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஆரிப் ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்ட தலைவர் ஜுபைர் அகமது தலைமையில் துணைத் தலைவர் பைரோஸ் கான், ஒருங்கிணைப்பாளர் ஆட்டோ இப்ராஹிம், ஏழாவது வார்டு தலைவி அமீனா ஆகியோர் முன்னிலையில் 30-கும் மேற்பட்ட சிறுபான்மை துறையைச் சேர்ந்த நிர்வாகிகள் காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுகொள்ளப்பட்டவர்களுக்கு மெழுகு வர்திகள் ஏற்றிய நிலையில் அஞ்சலி செலுத்தினர்.