டாக்டர் மு.வரதராசனார் பிறந்த தினம்.,மாவட்ட ஆட்சித்தலைவர் மலர் தூவி மரியாதை!
தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் 114 வது பிறந்த தினத்தையொட்டி இராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா மலர் தூவி மரியாதை செய்தார்கள்.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் 114 வது பிறந்த தினத்தையொட்டி இராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலை அமைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்கள்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், இராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நகரமன்ற உறுப்பினர் வினோத் குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக், வட்டாட்சியர் ஆனந்தன், தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் குடும்ப உறவினர்கள் பொதுமக்கள் உள்ளனர்.