பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பட்டியல் அணி சார்பாக அம்பேத்கர் ஜெயந்தி விழா கருத்தரங்கம்!
பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பட்டியல் அணி சார்பாக அம்பேத்கர் ஜெயந்தி விழா கருத்தரங்கம்!
ராணிப்பேட்டை மாவட்டம் மறு தாளம் கூட்ரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பட்டியல் அணி சார்பாக நடைபெற்ற பாரத ரத்ன டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் நெமிலி ஆனந்தன் தலைமை தாங்கினார் இதில் சிறப்பு அழைப்பாளராக பட்டியல் அணி தேசிய செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ் மவுரியா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த கருத்தரங்க கூட்டத்தில் மாவட்ட தலைவர் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஆற்காடு நகர மண்டல் முதலிடத்தில் தேர்வானதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்வெங்கடேஷ் மௌரிய அவர்களின் கையால் ஆற்காடு நகர தலைவர் பாஸ்கரன்அவர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார்.
இவ்விருது பெற கடுமையாக உழைத்த ஆற்காடு நகர மண்டலத்தை சேர்ந்த தேசிய, மாநில, மாவட்ட, நகர, நிர்வாகிகள், ஆர்காடு நகர பார்வையாளர், மற்றும் அனைத்து அணி, பிரிவு, மகளிர் நிர்வாகிகள், கிளைத் தலைவர்கள், கிளை கமிட்டி பொறுப்பாளர்கள், அனைத்து தாமரை சொந்தங்களுக்கும் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக நகர தலைவர் பாஸ்கரன் தெரிவித்தார்.