முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுக பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டம்!
நெல்லிக்குப்பம் நகர அதிமுக சார்பில் பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் வடக்கு மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, அவர்களின் ஆணைக்கிணங்க பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உட்பட்ட நெல்லிக்குப்பம் நகர கழக அதிமுக சார்பில் தனியார் மண்டபத்தில் நகர கழக செயலாளர் சேகர், ஏற்பாட்டின் பேரில் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்சி.சம்பத், தலைமையில் நடைபெற்றது.
எஸ்.அப்துல்ரஹீம், முன்னாள் அமைச்சர் சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் சத்யா பன்னீர்செல்வம் மாநில மகளிர் அணி துணை செயலாளர் ஆகியோர் சிறப்பு அமைப்பாளராக கலந்து கொண்டடு பூத் கமிட்டி பொறுப்பாளர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்,
அண்ணா கிராமம் வடக்கு ஒன்றிய செயலாளர் நாகபூஷணம் கலந்து கொண்டார் மற்றும்பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட, நகர, பேரூர் கிளைக் கழக நிர்வகிகள் மற்றும் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.