ஆற்காடு திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா..தருமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு!
முப்பது வெட்டி கிராமத்தில் தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவில் இறுதி நாளான நேற்று முதலியார் சமூகத்தின் சார்பாக தருமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி கிராமத்தில் தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகாபாரத சொற்பொழிவு, நாடகம் ,அர்ஜுனன் தபசு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் இறுதி நாளான நேற்று முதலியார் சமூகத்தின் சார்பாக தருமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வண்ண மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமர் சீதாதேவி மற்றும் கிருஷ்ணர் வான வேடிக்கை மேளதாளங்கள் முழங்க பொய்க்கால் குதிரை, கொக்காளியாட்டம், மங்கல இசை வாத்தியங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முதலியார் சமூகத்தினர், விழா குழுவினர்கள் மற்றும் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பக்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.