55ᵒC வரையிலான தீவிர வெப்பநிலையை தாங்கும் புதிய பேனாசானிக் AC அறிமுகம்!

Loading

பேனாசானிக், தென்னிந்தியாவில் தனது 2025 AC அணிவகுப்பை அறிமுகப்படுத்துகிறது; இவை 55ᵒC வரையிலான தீவிர வெப்பநிலையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஏர் கன்டிஷனர்களை (ACக்கள்) தயாரிப்பதில் அனுபவம் பெற்ற முன்னனி பன்முக செயல்பாடுகளை பெற்ற பேனாசானிக் லைஃப் சொல்யூஷன்ஸ் இந்தியா ஆனது இன்று தனது ஏர் கண்டிஷனர்களின் 2025 அணிவகுப்பை தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தியது மற்றும் கோயம்புத்தூர், இதன் முக்கியமான சந்தையாக திகழ்கிறது. பேனாசானிக்கின் புதிய ரெசிடென்ஷியல் ஏர் கண்டிஷனர் (RAC) இன் புதிய ரேஞ் ஆனது ஸ்மார்ட் லிவிங்கை மறுவரையறை செய்யும் வகையிலும் உச்சக்கட்ட கோடை காலங்களில் உயர் சுற்றுப்புற வெப்ப அளவுகளை (55ᵒC; 55 டிகிரிக்கள் செல்ஷியஸ்) தாங்கும் அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் 1.0, 1.5 மற்றும் 2.0 டன்கள் பிரிவுகள் முழுதும் 61 புதிய மாடல்களை வழங்குகின்ற இந்த புதிய ரேஞ் ஆனது தற்போது நுகர்வோர்களுக்கு அனைத்து முன்னனி .

PMIN, PLSIND இன் ஏர் கண்டிஷனர்ஸ் குரூப்பின் பிசினெஸ் ஹெட் ஆன அபிஷேக் வர்மா கூறுகையில், “இந்தியாவின் AC ஊடுருவல் ஆனது தற்போது 7-8% என்ற அளவில் நிலவுகிறது மற்றும் இதன் சந்தை, (2023-2029) இல் 16.5% என்ற CAGR* அளவில் வளர எதிர்பார்க்கப்படுகிறது.

பேனாசானிக் ACக்கள் ஏறத்தாழ 45% உயர் வளர்ச்சியை ஏப்ரல்-மார்ச் 2025 இல் தொழில்துறை சராசரியை விட அதிகமாக பதிவு செய்துள்ளன மற்றும் இதற்கு கோயம்புத்தூர் ஆனது ஒரு வலுவான பங்களிப்பவராக உள்ளது. தென்னிந்தியா ஆனது எங்கள் தற்போதைய AC சந்தை பங்கிற்கு ஏறத்தாழ 29% பங்களிப்பு தருகிறது (காலண்டர் ஆண்டு – CY’24). ஸ்மார்ட், ஆற்றல் திறன் வாய்ந்த, இன்வெர்ட்டர் AC க்களுக்கான தேவையின் ஆதரவில் நாங்கள் தென்னிந்தியாவில் இந்த சீசனில் (CY’25) 25% அதிக வளர்ச்சியை பெற எதிர்பார்க்கிறோம்,”
என்று விளக்கினார்.

0Shares