தலித் விடுதலை இயக்கம் சார்பில் கள்ளிமந்தயத்தில் அம்பேத்கர் அகவை தினம் கொண்டாட்டம்!
கள்ளிமந்தயத்தில் தலித் விடுதலை இயக்கம் சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134 -வது அகவை தினம் கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தில் சட்ட மாமேதை,புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின்134 -வது அகவை தினத்தை முன்னிட்டு தலித் விடுதலை இயக்கம் மாநில தலைவர் கே. ராமர் தலைமையில் கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் தமிழ் புலிகள் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ப.செல்வகுமார் அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி டாக்டர் அம்பேத்கரின் மாண்புகள் எடுத்துரைத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
மேலும் 60-ற்கும்மேற்பட்ட தவில் நாதஸ்வர இசைக் கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது மேலும் 1000-ற்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மாபெரும் அன்னதானமும் நடைபெற்றது இதில் பள்ளி மாணவ மாணவியர்கள் ஊர் பொதுமக்கள் அம்பேத்கர் பற்றாளர்கள் சமூக ஆர்வலர்கள் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.