1.237 பயனாளிகளுக்கு ரூபாய் 8.27 கோடி மதிப்பிலான அரசு நல திட்ட உதவி..தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

Loading

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் என்.என் மஹாலில் காணொளி வாயிலாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் பங்கேற்று 1.237 பயனாளிகளுக்கு ரூபாய் 8.27 கோடி மதிப்பிலான அரசு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய விடுதி பள்ளி கட்டிடங்கள் சமுதாய கூடங்கள் கற்றல் கற்பித்தல் அறைகள் பழங்குடியினர் வீடுகள் ஆகியவற்றை திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் என்.என் மஹாலில் காணொளி வாயிலாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் பங்கேற்று 1.237 பயனாளிகளுக்கு ரூபாய் 8.27 கோடி மதிப்பிலான அரசு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது உடன் நாடாளுமன்ற உறுப்பினர் மணி, அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார் ,தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் கவிதா, அரூர் வருவாய் கோட்டாட்சியர் சின்னுசாமி ,முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ,மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தேன்மொழி ,அரூர் பேரூராட்சி தலைவர் இந்திராணி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

0Shares