மானியத்துடன் கூடிய கடன் உதவி…அமைச்சர் சு முத்துசாமி வழங்கினார்.!
ஆதி திராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவியினை அமைச்சர் சு முத்துசாமி பங்கேற்று வழங்கினார்.
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தாட்கோ மூலம் முதலமைச்சரின் ஆதி திராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவியினை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு முத்துசாமி பங்கேற்று வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ்,மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஐஏஎஸ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார்,மாநகராட்சி மேயர் நாகரத்தினம் எம் எல் ஏ., சந்திரகுமார் துணை மேயர் செல்வராஜ் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திட்ட இயக்குனர் அர்ப்பித் ஜெயின் ஐஏஎஸ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.