எம் ஜி ஆர் இளைஞர் அணி சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு..முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா பங்கேற்பு!

Loading

மணவாள நகரில் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மணவாள நகரில் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா நீர் மோர் பந்தலை திறந்து வைத்து இளநீர், மோர் , தர்பூசணி, ரஸ்னா, ரோஸ் மில்க், ஆரஞ்சு ஆகியவற்றை வழங்கினார்.

இதில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர், அவைத்தலைவர் சிற்றம் சீனிவாசன், மாவட்ட தலைவர் இன்பநாதன், நிர்வாகிகள் ஆர்.டி.இ.சந்திரசேகர் செந்தில்குமார், பி.வி.பாலாஜி, பாசூர்ன், ஜி.உமாபதி, ஆர்.ஆர்.சுரேஷ்குமார், விஜயகாந்த், வழக்கறிஞர் பிரிவு சந்திரசேகர் மற்றும் சத்தியமூர்த்தி உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

0Shares