உழவர்கரை சமுதாய நலக்கூடத்திற்கு இருக்கைகள்,ஒலிபெருக்கி அமைத்து தரவேண்டும்.. புதுச்சேரி மக்கள் நல இயக்கம் அரசுக்கு கோரிக்கை!
உழவர்கரை சமுதாய நலக்கூடத்திற்கு இருக்கைகள் மற்றும் ஒலிபெருக்கி அமைத்து கொடுக்க வேண்டும் என்று காரைக்கால் & புதுச்சேரி மக்கள் நல இயக்கம் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி & காரைக்கால் புதுச்சேரி மக்கள் நல இயக்க ஒருங்கிணைப்பாளர் G.P. தெய்வீகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:உயர்திரு உழவர்கரை நகராட்சி ஆணையர் அவர்களே.
புதுச்சேரி மாநிலம் உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட உழவர்கரை காளி கோவில் அருகில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடம் என்பது ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட திருமண மண்டபம்.
ஆனால் இத்திருமண மண்டபத்தில் சுப காரியங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடத்திட ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள் முற்படும்பொழுது அங்கு மக்கள் அமரும் வகையில் இருக்கைகள் மற்றும் ஒலி பெருக்கி வசதிகள் இன்றி மிகவும் சிரமகத்திற்கு ஆளாகும் சூழ்நிலை அதிகம் காணப்படுகிறது.
ஆகையால் உயர்த்திரு உழவர்கரை நகராட்சி ஆணையர் அவர்கள் உடனடியாக கவனத்தில் கொண்டு இருக்கிகள் மற்றும் ஒலித்து இருக்கு வசதிகள் செய்து கொடுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எமது அமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம் என அந்த செய்தி குறிப்பில் புதுச்சேரி & காரைக்கால் புதுச்சேரி மக்கள் நல இயக்கம் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.