மத்திய அரசை கண்டித்து குன்னூர் அருகே திமுகவினர் போராட்டம்!

Loading

மத்திய அரசை கண்டித்து குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காளிதாசன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மத்திய அரசு நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை கொடுக்காததால் தமிழக முதலமைச்சர் பலமுறை வலியுறுத்தி வருகிறார்.இதேபோல் பாராளுமன்றத்திலும் திமுக எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் எவ்வித பலனும் இல்லாததால் இதனை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் நேற்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காளிதாசன் தலைமை வகித்தார்.திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வம் முன்னிலை வைத்தார்.மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத் குமார் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.இதில் சிடிஎன் பாரூக்,கண்டோன்மென்ட் வினோத் குமார்,கோவர்தன், ஜெகதளா பேரூராட்சி மன்ற உறுப்பினர் யசோதா,எடப்பள்ளி முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன்,ஜெகதளா பேரூராட்சி திமுக செயலாளர் சஞ்சீவ் குமார்,கிளை செயலாளர் அமல்ராஜ்,உட்பட கட்சியினர் மற்றும் 100 நாள் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

0Shares