மத்திய அரசை கண்டித்து திருமலைகிரியில் திமுக போராட்டம்!

Loading

பா.ஜ.க அரசைக் கண்டித்து திமுக சார்பில் சேலம் திருமலைகிரியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் கழகத்தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நீதி ரூ.4034 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து ஏழை எளியோர் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக சேலம் தெற்கு ஒன்றிய கழக தி.மு.க செயலாளர் மாணிக்கம் தலைமையில் திருமலைகிரி ஊராட்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது இதில் ஊராட்சி கழக நிர்வாகிகள் கழக மூத்த முன்னோடிகள் பொதுமக்கள் 100 நாள் வேலை வாய்ப்பில் பாதிக்கப்பட்ட மகளிர் மற்றும் கழக உடன்பிறப்புகள் 500 – க்கு மேல் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

0Shares