சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற தமிழ்நாடு காவல்துறை!
19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.
25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி 2024-2025 நிறைவு விழா 21.03.2025 அன்று 16.00 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
பிரம்மாண்டமான நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதியநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பதக்கங்களும் பரிசு கோப்பைகளும் வழங்கினார்கள். மேலும் காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத் தலைவர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
மாநிலங்களுக்கிடையே ஒட்டு மொத்தமாக சிறப்பாக செயல்பட்ட அணியாக சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழ்நாடு காவல்துறையும், அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை ஒடிசா மாநில காவல் துறையும் பிடித்தார்கள்.