இந்திரா காந்தி மருத்துவமனைக்கு விரைவில் செவிலியர் நியமனம்..MLA களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதில்!
இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள புதியதாக 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அவுட் சோர்சிங் அல்லது நேரடியாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது- முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு 15 ஆவது சட்டப்பேரவையின் 6 ஆவது கூட்டத்தொடரில் மாண்புமிகு முதலமைச்சரின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.அப்போது புதுச்சேரியில் உள்ள ஹோம் ஸ்டேக்கள் நகராட்சி மூலம் கண்காணிக்கப்பட்டு வரி போட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமாரின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிகள் புதியதாக 226- செவிலியர்கள் நியமிப்பது தொடர்பான கோப்புகள் கடந்த 1-ஆண்டாக நீதித்துறையில் தேங்கி உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி சொசைட்டி என்பதால் அதன் தலைவரே அனைத்து முடிவையும் எடுக்கலாம் என சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழு(G.B) கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவே விரைவில் செவிலியர் பதவி நிரப்பப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்தார்.
இதேபோல ராஜீவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை சுத்தமாக பராமரிப்பது போல இந்திரா காந்தி அரசு மருத்துவமனை பராமரிப்பது இல்லை என சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள புதியதாக 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அவுட் சோர்சிங் அல்லது நேரடியாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது- முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 3-மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை,உடனடியாக அவர்களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு கிராமப்புறங்களில் அரசு ஊழியர்கள் பணி மாற்றம் செய்யும் போது அவர்களுக்கு மீண்டும் நகரப்பகுதியில் பணி அமர்த்துவதற்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.