தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரியை சந்தித்து கீழ்கண்ட கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு MGFAஜாபர் அலி மனுஅளித்தார்

Loading

தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரியை சந்தித்து கீழ்கண்ட கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு MGFAஜாபர் அலி மனுஅளித்தார்
தெற்கு ரயில்வே மண்டல ரயில் உபயோகிப்போர் ஆலோசனை குழு உறுப்பினர் மனு ஒன்றை கொடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக   பரிசீலித்து ஆவன செய்வதாய் உறுதி அளித்தார்கள்.
அந்த மனுவில்சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் அருகிலுள்ள சிந்தாதிரிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்த நடை மேம்பாலத்தை பயன்படுத்தி நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கும், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ரேடியோ மார்க்கெட் எனப்படும் ரிச்சி தெருவுக்கும் வந்து செல்வது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்தது.
பொதுமக்களுக்கும், ரயில் பயணிகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்த இந்த நடை மேம்பாலம் தற்போது ரயில் தண்டவாளம் 4வது பிளாட்பாரம் விரிவாக்க பணிக்காக இடித்து அகற்றப்பட்டுள்ளது.
இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ரயில் பயணிகளும் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
பெண் பயணிகள், முதியவர்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்தை சிரமத்துடன் ஏறி கடக்க முடியாமல் இந்தப் பாதையை பயன்படுத்துவதையே தவிர்த்து வருகின்றனர்.
தண்டவாள விரிவாக்க பணியை விட நடை மேம்பால பணியே முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் எப்போது நடைபாலம் கட்டித் தரப்படும்? என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதேசமயம் நடை மேம்பாலம் இடித்து அகற்றப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி அலுவலக ஊழியர்கள், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டிய பயணிகள் பணிக்கு செல்ல முடியாமல் நாள்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்போது தண்டவாள விரிவாக்க பணி நிறைவடைந்துள்ள நிலையில் தாமதம் செய்யாமல் நடை மேம்பாலம் கட்டுமான பணியை விரைந்து தொடங்கி முடித்திட வேண்டுமென பொதுமக்களும், ரயில் பயணிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0Shares