புதுச்சேரி ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லூரியில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்…

Loading

புதுச்சேரி
புதுச்சேரி ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லூரியில்  ஊழியர்கள் நான்காவது நாளாக தொடர் வேலை நிறுத்தம்…
புதுச்சேரி குரும்பாபேட்டில் இயங்கும் அரசு நிறுவனமான ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லூரியில் கடந்த டிசம்பர் 2024 சம்பளம் போடாமல் விட்டதால் ஊழியர்கள் பாதிப்படைத்துள்ளனர். மேலும் பொங்கல் விழா முடிந்தும் சம்பளம் கிடைக்காத சூழ்நிலையில் ஊழியர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.   மேலும் ஏற்கனவே அரசாங்காம் பிப்ரவரி 2025 வரை சம்பளத்துக்காக நிதி அரசாங்கம் ஒதுக்கியும் டிசம்பர் மாதத்திலிருந்து சம்பளம் கிடைக்கவில்லை என்பதால் ஊழியர்கள் பாதிப்புள்ளாகி உள்ளனர் . இது சம்பந்தமாக புதுச்சேரி அரசு தன்னாட்சி கல்லூரிகள்  ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  கூட்டமைப்பு சார்பாக  கவர்னர் மற்றும் தலைமை செயலருக்கு கடிதம் கொடுக்கப்பட்டு  விரைவாக சம்பளம் கிடைக்க வழிவகை செய்யவும் மற்றும் துறை செயலாளருக்கும் தொடர் தர்ணா போராட்டம் நடத்த கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.    மேலும் சம்பளம் கிடைக்காதல்  தொடர்ச்சியாக 4வது நாளாக இன்றும்  தர்ணா போராட்டம் நடைபெற்றது. எனவே புதுவை முதல்வரும், கால்நடைதுறை அமைச்சரும், தலைமைச்செயலர் மற்றும் கால்நடை துறை செயலர் ஆகியோர் தலையிட்டு ஊழியர்களின் சம்பள பிரச்சனையை தீர்த்து வைக்கும்படி  அரசு தன்னாட்சி கல்லூரிகள்  ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0Shares