அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர், அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் வருடாபிஷேகம்.

Loading

ஒட்டன்சத்திரம்

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர், அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் வருடாபிஷேகம்.

ஒட்டன்சத்திரத்தில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர், அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் ஆன்மீக அன்பர்கள் குழு சார்பில் வருடாபிஷேகம்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக் கோவிலில் சென்ற வருடம் கும்பாபிஷேகம் நிறைவடைந்து ஓராண்டு ஆனதை முன்னிட்டு யாகம் வளர்த்து பல்வேறு திருத்தலங்களில் இருந்து தீர்த்தங்கள் முத்தரித்து கலச கும்பங்கள் அலங்கரிக்கப்பட்டு கோவிலின் உட்பிரகாரங்களில் கலசங்கள் பவனி உலா வந்து அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் சன்னதிக்கும், அருள்மிகு காமாட்சியம்மன் சன்னதிக்கும், தீர்த்தங்கள் செலுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இந்த வருடாபிஷேக விழாவில் சிறப்பு அழைப்பாளராக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் அன்னலட்சுமி சிவக்குமார் கலந்து கொண்டார் . சிறப்பு பூஜைகள் முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம்,பிரசாதங்கள் வழங்கப்பட்டது வருடாபிஷேகத்தை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர், அருள்மிகு காமாட்சி அம்மன் ஆன்மீக அன்பர்கள் குழு
சிறப்பபாக ஏற்பாடு செய்திருந்தனர் மேலும் இந்த விழாவில் பெருந்திரளான ஆன்மீக அன்பர்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

0Shares