குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்
தேனி மாவட்டம்
குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும்
கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் 26.01.2025 குடியரசு
தினத்தன்று முற்பகல் 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் கிராம ஊராட்சியின்
செயல் அலுவலர் மற்றும் வ ட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)-ஆல் நடத்தப்பட உள்ளது.
130 கிராம ஊராட்சிகளிலும் மிகச் சிறப்பாகவும், பொதுமக்கள் ஆர்வத்துடனும்
கலந்து கொள்ளும் வகையிலும் கிராம சபைக் கூட்டத்தை நடத்திட உரிய
நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும்
ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே, கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக்
கூட்டத்தில் கலந்து கொண்டு, சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி