எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் உரிமைகளைகுழிதோண்டி புதைக்கும் அவலம்
எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பத்திரிகையாளர்களின் உரிமைகளை தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை பத்திரிகையாளர்களின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் அவலம்
பத்திரிகை நடத்துவதற்கு மத்திய அரசிடம்பதிவு செய்து முறையாகRNIபெற்று பத்திரிகை நடத்துபவர்கள்
அரசுக்கும் மக்களுக்கும் பலமாக இருக்கும் பத்திரிகை துறையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்கும் போதும் சரி வாழ்க்கையிலும் சரி பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் தமிழக செய்தித்துறை மூலம் வழங்கக்கூடியஅங்கீகார அடையாள அட்டை வழங்குவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்திருப்பது வேதனைக்குரியது அதுமட்டுமல்லாமல் கண்டனத்திற்குரியதும் ஆகும்.
இந்த அரசு ஒரு பத்திரிக்கையாளர் குடும்பத்தில்இருந்து நடத்துகிற அரசு இதில் பணி புரிபவர்கள் என்ன கஷ்டத்தில் இருப்பார்கள் என்பது நன்கு அறிந்த அரசு. ஆகவே செய்தித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் அரசு சம்பளத்தை வாங்கிக்கொண்டு அது பற்றாமல் அடையாள அட்டை கொடுப்பதற்குபத்திரிகையாளர் சங்கம் என்ற பெயரில் ஒரு சில சங்கத் தலைவர்கள்அடையாள அட்டைவாங்கித் தருவதற்குஅவர்கள் சொல்லும் பிரிண்டர் இடத்தில் 5000 .கொடுத்து பிரிண்டர் பில்போட்டுவாங்கித் தந்தால் போதும் ஒருஅட்டைக்கு 5 ஆயிரம் முதல் 30,000 வரை கொடுத்து வாங்குவதற்கு புரோக்கராக செயல்படுவதாக
பல பத்திரிகையாளர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர் அதிகாரிகள் பேசும்போது அரிச்சந்திரன் மாதிரி பேசுகின்றனர் ஆனால் உள்ளுக்குள்ளே இவ்வளவு வேலை செய்கின்றனர்இதனால் அரசுக்கு ஒன்றும் லாபம் இல்லை கெட்ட பெயர் தான் மிஞ்சும் சில அதிகாரிகள் அரசுக்கு கெட்ட பெயர் வர வேண்டும் என்பதற்காக உள்நோக்கத்தோடு வேலை செய்கின்றனர் என்பது இதிலிருந்து தெரிகிறது விழித்துக் கொள்ளட்டும் தமிழக அரசு