கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சிமல்லாபுரம் VAO அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டம்

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சிமல்லாபுரம் VAO அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சி துணை கிராமம் மல்லாபுரம் VAO அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
 போராட்ட வீரர் மகாத்மா காந்தி அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் ரங்கப்பனூர் ஊராட்சி துணை கிராமம் மல்லாபுரம் VAO அலுவலக வளாகத்தில் கிராம சபா கூட்டம் முக்கிய அறிவிப்புகள்ளுடன் நடைபெற்றது இந்த நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் R.M.S.K அர்ச்சனாகாமராஜன்  தலைமையில் நடைபெற்றது.
இதில் *பற்றாளர் கார்த்திக் துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள்   D.மீணா துரை K.இளம்வழிதி V.ஸ்டெல்லா வேலூ R.தமிழ் ரகு P.ரூபா புகழேந்தி S.ஏழுமலை C.மாசிலாமணி V.விருத்தம்பால் பச்சையாப்பிள்ளை 
 துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் பள்ளி கல்வி வேளாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கிராம சுகாதார செவிலியர் நூலகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பணித்தள பொறுப்பாளர்கள் தூய்மை காவலர்கள் தூய்மை பணியாளர்கள் O.H.T இயக்குனர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் நிகழ்ச்சியில் மக்களிடம் திறந்த வெளியில் மலம் கழிப்ப கூடாது எனவும் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் மற்றும் ஊராட்சி வரவு செலவு கணக்குகள் மக்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.  மக்களுக்கு துண்டு நோட்டீஸ் வழங்கியும் மக்களுக்கு தேவையான குடிதண்ணீர் சிமெண்ட் சாலைகள் வடிகால் வாய்க்கால் சிறு பாலம் மேல் குடிநீர் தேக்க தொட்டி மற்றும் ரங்கப்பனூர் & மல்லாபுரம் கிராமத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பல வகையான மரக்கன்று நட்டு பசுமை கிராமமாக உருவாக்கிட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  இதில் ஊராட்சியில் உள்ள அனைத்து தரப்பு பொதுமக்களும் மற்றும் அனைவரும்  பாலியல் வன்கொடுமை தடுப்பது சம்பந்தமாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் இறுதியில் ஊராட்சி செயலர் திருமால்வளவன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
0Shares