பிள்ளையார் புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி சார்பாக போதை விழிப்புணர்வுப் பேரணி.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போதை விழிப்புணர்வுப் பேரணி சிவந்தி ஆதித்தனார் கல்லூரி சார்பாக நடைபெற்றது.‌

தமிழக முதல்வரின் ஆணைப்படியும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வழிகாட்டுதல் படியும் மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறைகள் சார்பாக போதை விழிப்புணர்வுக்குறித்த போட்டிகள், கருத்தரங்கங்கள் , பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி சார்பில் 200க்கும் அதிகமான மாணவ மாணவியர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி கல்லூரியில் இருந்து என்.ஜி.ஓ காலனி  வரை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ( ஆயம்) லொரைட்டா மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கிரேட்டர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கல்லூரி முதல்வர் அருணா வரவேற்றார். கலைமாமணி பழனியாபிள்ளை திட்ட விளக்கவுரை யாற்றினார். தென்குமரி கல்விக்கழகச் செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார்,ஏ.எம்.கே மதுபோதை மறுவாழ்வு மைய இயக்குநர் அருள் ஜோதி விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட்டு; நாட்டுநலப்பணித்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

ரோட்டரி கிளப் ஆப் கிரேட்டர் நாகர்கோவில் அமைப்பின் தலைவர் பிராங்கிளின் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரவீணா மற்றும் புகையிலை கட்டுப்பாட்டு சமூக சேவகர் சரண்யா, புகையிலை தடுப்பு கண்காணிப்பாளர் சிலுவை வஸ்தியன், திட்ட தாசில்தார் பாண்டியம்மாள்,சமூக சேவகி திருநங்கை சந்தியாதேவி, கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் முரளி மனோகர்லால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares