கள்ளக்குறிச்சி பகுதியில் 25 ஆயிரம் மதிப்புள்ள பிவிசி பைப்புகள் திருடு

Loading

கள்ளக்குறிச்சி பகுதியில் 25 ஆயிரம் மதிப்புள்ள பிவிசி பைப்புகள் திருடு.

கா.மாமனந்தல் ஏரிக்கு செல்லும் வழியில் எஸ் கே ஆர் பிரபு என்பவரது மூன்று ஏக்கர் நிலத்தில் தனது கிணற்றில் உள்ள பிவிசி பைப்பை யாரோ இரண்டு நபர்கள் அறுத்துக் கொண்டிருப்பதாக அக்கம் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக நிலத்தில் சென்று பார்த்த போது உரிமையாளர் வருவதை பார்த்து தப்பி ஓட முயன்ற நிலையில் சுற்றி வளைத்து பிடித்த போது வ உ சி நகர் பகுதியை சேர்ந்த நரேஷ் 24 மற்றும் அஜித்30 ஆகிய இருவரையும் பிடித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்து சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள பிவிசி பைப் திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களிடம் மூன்று அடி பைப்புகள் நீர்மூழ்கி மோட்டார் ஒன்று சுத்தி ஒன்று இருந்தது கைப்பற்றப்பட்டது .டி என் 15 எம் 0970 யமஹா பேஷன் ப்ரோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .மேலும் நிலத்தின் உரிமையாளர் எஸ் கே ஆர் பிரபு புகார் அளித்ததின் அடிப்படையில் இருவரையும் கைது செய்து காவல் உதவி ஆய்வாளர் பரிமளா தலைமையில் போலீசார்   விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0Shares