*குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கவுன்சில் சேர்மன், வைஸ் சேர்மன் நியமனம்*
*குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கவுன்சில் சேர்மன், வைஸ் சேர்மன் நியமனம்*
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் என்பது பிரதமர் மோடி தலைமையின் கீழ் இயங்கி வரும் அமைச்சகம் ஆகும். இதன் நோக்கம் ஏற்கனவே உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஆதரித்தல் மற்றும் மேம்படுத்துதல், புதிய நிறுவனங்களை நிறுவுதல், காதி மற்றும் கிராம தொழில்களுக்கு உதவுதல், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், முக்கிய மற்றும் அத்தியாவசிய தொழில்களை மேம்படுதுதல் ஆகும். இதன் ஊக்குவிப்பு கவுன்சிலின் மதுரை மாவட்டத்திற்கு தலைவர் மற்றும் துணை தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேர்மன் மதுரை கே.கே. நகரை சேர்ந்த சாம்சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் வீரசோழன் கிராமம் ஆகும். மதுரை வக்பு வாரிய கல்லூரியில் இளநிலை வணிகவியல் பட்டப்படிப்பும், மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் முதுநிலை வணிகவியல் பட்ட மேற்படிப்பும் படித்துள்ளார். மனைவி சாந்தி இல்லத்தரசியாக உள்ளார். மகள்கள் பிரித்திவிகுமாரி, தெரசாகுமாரி இருவரும் மருத்துவர்களாக பணி புரிந்து வருகின்றனர். வைஸ்சேர்மன் நியமிக்கப் பட்டுள்ள வக்கீல். முத்துக்குமார் மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர். 25 வருடங்களாக வழக்கறிஞராக பணி செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் திருமங்கலம் ஆலம்பட்டி கிராமம் ஆகும். இவர் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பும் அண்ணாமலை பல்கலை கழகத்தில் முதுநிலை சட்ட மேற்படிப்பும் படித்து முடித்துள்ளார். மனைவி இளமதி இல்லத்தரசியாக உள்ளார். மகள்கள் ராஜ்லட்சுமி, காளிதர்சினி கல்லூரி மற்றும் பள்ளி படிப்பு படித்து வருகின்றனர். மேற்கண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவங்களின் ஊக்குவிப்பு கவுன்சிலின் மதுரை மாவட்டத்திற்கான சேர்மன் மற்றும் வைஸ்சேர்மனுக்கான நியமனத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் ஊக்குவிப்பு கவுன்சிலின் நேஷனல் சேர்மன் பிரதீப்மிஸ்ரா அறிவித்துள்ளார். மதுரை மாவட்ட சேர்மன் மற்றும் வைஸ் சேர்மனாக நியமனம் செய்யப் பட்டுள்ள சாம்சரவணன் மற்றும் வக்கீல். முத்துக்குமாருக்கு பல்வேறு தரப்பினர்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.