மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கு மாவட்ட *காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்., அவர்களின் தலைமையில் ஒவ்வொரு வார புதன்கிழமையும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக வளாக புதிய கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற முகாமில் காவல்நிலையங்களில் முறையான தீர்வு காணமுடியாத 14 மனுக்களில் 9 மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டது, நீலுவையில் உள்ள 5 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, புதிதாக 6 புகார் மனுக்களை பொதுமக்களிடம் பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு..லட்சுமனகுமார், திரு.பாலசுப்ரமணியன், திரு.திருமேணி, திரு.ராவிச்சந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சண்முகம், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் மனுதாரர்கள் பங்கேற்றனர்.
0Shares

Leave a Reply