காவல் துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் 10 போலி மருத்துவர்கள் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக எழுந்த புகாரில் மாவட்ட எஸ்பி கல்யாண் உத்தரவின்பேரில் காவல் துறையினர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குனர் சேகர் தலைமையிலான சுகாதாரத் துறையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்த சோதனையில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். பேரம்பாக்கம், கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆர்கே பேட்டை, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் மருத்துவம் பார்த்து வந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களின் விவரமாவது :1. கடம்பத்தூரில் முத்துசாமி என்பவர் டிஎன்எம்எஸ், எம்.ஏ., படித்து விட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.2..பேரம்பாக்கத்தி
7. திருவாலங்காடு அடுத்த வீரக்கோயில் கிராமத்தில் ரெஜினா (74).மருத்துவம் படிக்காமலேயே அவரது கணவர் கிளினிக் வைத்து நடத்திய அனுபவத்தை கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். 8.ஆர்.கே.பேட்டை அடுத்த செங்கட்டானூர் கிராமத்தில் ஞானபிரகாஷ்(35) என்பவர் பி.ஏ., எல்க்ட்ரோபதி படித்து விட்டு மருத்துவ மனை வைத்து நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். 9.பள்ளிப்பட்டு பகுதியில் மோகன் என்பவர் 12-ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் மருத்துவ மனை நடத்தி பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.10. பள்ளிப்பட்டு அடுத்த பெருமாநல்லூர் பகுதியில் வடிவேல் (53) என்பவர் 10-ஆம் வகுப்பு படித்து விட்டு கிளினிக் வைத்து பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிரடியாக 10 பேரும் கைது செய்யப்பட்டு அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர். நள்ளிரவு வரை நீடித்த விசாரணையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சம்மன் கொடுக்கப்பட்டு அழைக்கும் போது மருத்துவம் தொடர்பான அனைத்து சான்றிதழ்களையும் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவித்தனர்.