ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்துதல் பணி போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார்.

Loading

அரியலூர் மாவட்டத்தில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்துதல் பணியினை மாண்புமிகு

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், அணிக்குதிச்சான் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறை – நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு சார்பில் பூவானிப்பட்டு முதல் கீழநெடுவாய் சாலை தரம் உயர்த்துதல் பணியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று (09.04.2023) அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சொ.க.கண்ணன், அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழக அரசின் அனைத்து துறைகளின் சார்பில் வளர்ச்சித் திட்;டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத் துறை – நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு சார்பில் ஊராட்சி / ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல் திட்டத்தின் கீழ் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் பூவானிப்பட்டு முதல் கீழநெடுவாய் சாலை கி.மீ.0/0 – 4/200 வரை தரம் உயர்த்துதல் பணியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.

மேலும், இந்த சாலையினை செயல்படுத்துவதின் மூலம் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், விளந்தை மற்றும் தேவனூர் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன் பெறுவார்கள். எனவே, நடைபெறும் பணியினை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி நபார்டு கோட்டப் பொறியாளர் திரு.பெ.வடிவேல், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு.பரிமளம், அரியலூர் உதவிக் கோட்டப் பொறியாளர் திரு.வி.பி.சரவணன், உதவி பொறியாளர் திரு.ராஜா, உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *