21 கோவில்களில் 29 புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

Loading

21 கோவில்களில் 29 புதிய திட்டப்பணிகள்:
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.149 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 21 கோவில்களில் 29 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் 38.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம், அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி கோவில் சார்பில் 7.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, வேதபுரீஸ்வரர் கோவிலில் 3.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, சேலம் மாவட்டம், சேலம், சுகவனேஸ்வரர் சுவாமி கோவிலில் 3.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி. நாமக்கல் மாவட்டம், எஸ்.பழையபாளையம், அங்காளம்மன் கோவிலில் 1.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, ஈரோடு மாவட்டம், பண்ணாரி, பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 13.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்பது நிலை ராஜகோபுரம் மற்றும் கிரில்களுடன் கூடிய சுற்றுச்சுவர் கட்டும் பணி,
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை, கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் 2.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிகாணிக்கை மண்டபம் கட்டும் பணி, தேனி மாவட்டம், வீரபாண்டி, கவுமாரியம்மன் கோவிலில் 4.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி, தேவதானம்பட்டி, மூங்கிலனை காமாட்சியம்மன் கோவிலில் 3.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி. சமயபுரம், மாரியம்மன் கோவிலில் 3.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமாவாசை மண்டபம் கட்டும் பணி, ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி கோவிலில் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமடம், மருத்துவமனை மற்றும் உணவு அறை கட்டும் பணி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், நாகேஸ்வர சுவாமி கோவிலில் 3.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, திருவாரூர் மாவட்டம், குடவாசல், கோணேஸ்வர சுவாமி கோவிலில் 1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, ஊத்துக்காடு, கைலாசநாதர் சுவாமி கோவிலுக்கு 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று நிலை இராஜகோபுரம் கட்டும் பணி, மன்னார்குடி, ராஜகோபால சுவாமி கோவிலில் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பூவநாத சுவாமி கோவிலில் 2.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டி, வனபத்ர காளி யம்மன் கோவிலில் 5.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழுநிலை ராஜ கோபுரம் கட்டும் பணி, மருதமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 5.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்தூக்கி அறை, சேவார்த்திகள் காத்திருப்பு அறை, கட்டணச் சீட்டு வழங்குமிடம் ஆகியவற்றை கட்டும் பணி மற்றும் 3.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை சீரமைக்கும் பணி; திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 40.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபங்கள் மற்றும் பணியாளர்கள் நிர்வாக பயிற்சி மையம் கட்டும் பணி, மதுரை மாவட்டம், அழகர்கோவில், கள்ளழகர் கோவிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரியாழ்வார் திருவரசு மேம்படுத்தும் பணி, சென்னை, உத்தண்டி, பிடாரி அகிலாண்டம்மன் கோவிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணி; என மொத்தம் 149.93 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கோவில்களின் புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *