காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ராகுல் காந்தி எம்.பி பதவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா தலைமையில் திருவான்மியூரில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பிரதமர் மோடி சமூகத்தினரை பற்றி விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்தது.
இதையடுத்து எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீத்க்கம் செய்யப்பட்டதாக அறிவித்தனர். இதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட தமிழக காங்கிரஸ் கட்சியினர் திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில்
ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்தும்,பாசிச பாஜகவின் அதிகார வரம்பு மீரலை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தடையை மீறி தீப்பந்தம் ஏற்றியதாக சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா விடம் காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..