மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ”  மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு.! 

Loading

மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ” மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு.! ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் நேரில் புகார் மனு பெறப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்படுவது வழக்கம் இதைத் தொடர்ந்து நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்பு குறித்து மனு ,கணவனால் கைவிடப்பட்டோர் ,ஆதரவு அற்றோர் ஆகியோர் உதவித்தொகைக்காக பெறப்பட்ட மனுக்கள், இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு ,வாரிசு சான்றிதழ் கேட்டு மனு தொழில் கடன் சாலை வசதி அடிப்படை வசதி மேம்படுத்த மனு குடிநீர் வசதி மாற்று திறனாளிகள் கோரிக்கை மனு என மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 185 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடன் வழங்கப்பட்டு தீர்வு ஏற்படுத்த உத்தரவு பிறப்பித்தார் மேலும் தமிழக முதல்வர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் அமைச்சர் பெருமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மூலம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார் நிகழ்ச்சியில் மாவட்ட உதவி இயக்குனர் தமிழ் வளர்ச்சி ரெஜினா மேரி உதவி ஆணையர் சமூகப் பாதுகாப்பு திட்டம் முருகேசன் ,தனித்துணை ஆட்சியர் குமரன் ,துணை ஆட்சியர் பயிற்சி காயத்ரி ,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கோதை செல்வி ,உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்  .
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *