மாநில அளவிலான இலக்கிய மன்ற போட்டி
மாநில அளவிலான இலக்கிய மன்ற போட்டி உபதலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் தகுதி தமிழக அரசு மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளை
ஊக்கப்படுத்தவும்,
கலை மற்றும் இலக்கிய திறன்களை வளர்த்து எடுக்கவும்,
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக,
பள்ளிகளில் இலக்கிய மன்றம், வானவில் மன்றம், வினாடிவினா மன்றம், சிறார் திரைப்பட மன்றம், ஆகியவை
ஏற்படுத்த பட்டு
கல்வி மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப் பட்டு, அவற்றில் வெற்றி பெறும் மாணவர்கள் சென்னைக்கு வரவழைக்கப் பட்டு மாநில அளவில் போட்டிகளில் கலந்து
கொள்கிறார்கள்.
இந்த ஆண்டுக்கான போட்டிகளில் உபதலை அரசு மேல்நிலைப்
பள்ளி 6 – ம் வகுப்பு மாணவன் M. சாம்சன் ஜோஷ்வா அவர்கள் இலக்கிய மன்ற போட்டிகளில் கல்வி மாவட்ட அளவில், வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுபள்ளிக்கு பெருமை சேர்த்து உள்ளான் .
சென்னை செல்லும் இந்த மாணவனுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர் Shibu அவர்கள் ஊக்க தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மாணவர் சாம்சன் அவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பொன்னாடை அணிவித்து நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப் பட்டது. மேலும் மாணவர் சாம்சன் அவர்கள் போட்டியில் வெற்றி
பெற ,செய்தி அலசல் நாளிதழ் சார்பாகவும், பொது மக்கள் மற்றும் சமுக ஆர்வலர்களின் சார்பாகவும் ,
செய்தி அலசல் நாளிதழ் நீலகிரி மாவட்ட செய்தியாளர், மற்றும் உபதலை பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் (ரமேஷ்) எனது சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்