திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 17.3.23 நடைபெற்ற அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன் அவர்கள் மாண்புமிகு மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் சுகாதாரத்துறை மூலம் கருணை அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ ப., அவர்கள்,கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திரு.தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் இ.ஆ.ப., அவர்கள்,தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள்,தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.கௌரவ் குமார் இ.ஆ.ப., அவர்கள்,மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.அஜய் சீனிவாசன் அவர்கள்,மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.அ.பிரம்மசக்தி அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.