திமுக அரசால் பொய்வழக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Loading

தென்காசி மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது திமுக அரசால் பொய்வழக்கு போடப்பட்டுள்ளதாகக் கூறி அதனைக் கண்டித்து தென்காசி பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் S.செல்வ மோகன்தாஸ் பாண்டியன்,  தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளரும் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் கழக அமைப்புச் செயலாளர்  P.G ராஜேந்திரன், முன்னாள் அமைச்சரும் மகளிரணி துணைச் செயலாளருமான V.M.ராஜலெட்சுமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் K.R.B.பிரபாகரன், மாவட்ட அவைத்தலைவர்கள் சண்முகசுந்தரம், மூர்த்தி, மாவட்டக்கழக துணைச் செயலாளர்கள் வீரபாண்டியன், பொய்கை மாரியப்பன், மாவட்டப் பொருளாளர்கள் சாமிநாதன், சண்முகையா மற்றும் மாவட்ட,  ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகளும் அதிமுக சார்பு அணி நிர்வாகிகளும் மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *