60 லிட்டர் பிடிக்கக்கூடிய 3 லாரி டியூபில் சுமார் 150 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் விளம்பாவூர் கிராமத்தில் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த நபரை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறைகள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்., அவர்கள் உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் காய்ச்சுதல், கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.தாரணேஸ்வரி தலைமையில் தனிப்படை காவலர்கள் கள்ளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாம்பாவூர் கிராமத்தில் மதுவிலக்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பழனிவேல்(48) த/பெ காளியன் என்பவர் விளாம்பாவூர் எரிக்கரை அருகே கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த போது கையும் களவுமாக கைது செய்யபட்டு அவரிடமிருந்து தலா 60 லிட்டர் பிடிக்கக்கூடிய 3 லாரி டியூபில் சுமார் 150 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *