பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி

Loading

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டிபென்சில், பிரஷ் பயன்படுத்தாமல் தீக்குச்சிகளை எரிய வைத்து முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்து இருட்டில் இருக்கும் எங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டி கோரிக்கை வைக்கும் பகுதிநேர ஓவிய ஆசிரியர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சுசெல்வம் அவர்கள் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி   அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக இருட்டில் இருக்கும் எங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற வாசகம் எழுதி பென்சில், பிரஷ் பயன்படுத்தாமல் தீக்குச்சிகளை எரிய வைத்து  அதில் இருக்கும் கரியைக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்தார். அரசுப் பள்ளிகளில்  6ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம் கணிணி, தையல், இசை போன்ற பாடங்களை 11 ஆண்டுகளுக்கு மேலாக கற்றுக் கொடுத்து வருகிறார்கள். இவர்களுக்கு மாதம் ஊதியமாக  ரூபாய் 10 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.  பகுதிநேர ஆசிரியர்களுக்கு  சம்பள உயர்வோ,பணி நிரந்தரமோ வழங்கப்படவில்லை, வாழ்வதரம் இன்றி கஷ்டப்படுகிறார்கள்.இந்நிலையில்பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் பணி நிரந்தரம் செய்யவேண்டி, இருட்டில் இருக்கும் எங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற வாசகத்தை எழுதி வாசகத்திற்கு ஏற்ப  பென்சில், பிரஷ் பயன்படுத்தாமல்  ஒரு தீப்பெட்டியில் இருக்கும் தீக்கொச்சிகளை  எரிய வைத்து அதில் இருக்கும் கரியைக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் படத்தை 15 நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்து அரசுக்கு நூதன முறையில் கோரிக்கை வைத்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *