ஊத்தங்கரையில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம்.

Loading

ஊத்தங்கரையில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா உடனே வழங்கி அரசு இலவச வீடு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். தொழிற்சங்க உறுப்பினர்கள்  50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . மேலும் ஆர்ப்பாட்டத்தில் காட்டேரி ஊராட்சி அனுமன் தீர்த்தம் கிராமத்தில் பல ஆண்டுகளாக  வசித்து வரும் ஏழை கூலி விவசாயிகளுக்கு கிராம தீர்மானம் நிறைவேற்றி பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்றது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *