மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில்,  நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில்,  நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி.யின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மேசைபந்து பயிற்சி அளிப்பதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மாற்றுத்திறனாளி பயிற்சியாளருக்கு உதவித்தொகையாக ரூ.20.000|-திற்கான காசோலையையும், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.6.200/- வீதம் ரூ.18,600/- மதிப்பீட்டிலான இலவச தையல் இயந்திரங்களையும், ஒரு பயனாளிகளுக்கு6,400 மதிப்பீட்டில் இலவச சலவை பெட்டியையும் என மொத்தம் 45,000மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) சி.ய.மதுசூதணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.கா.காயத்திரி சுப்பிரமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குணசேகர் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உள்ளனர்,

0Shares

Leave a Reply