பாஜக தேசிய பொதுச்செயலாளர் திரு தருண் சவுக் சிறப்பு அழைப்பாளராக  கலந்து கொண்டார்

Loading

புதுச்சேரி  பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் உள்ள சக்தி கேந்திர தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் செயல்படுவதற்கான வழிகாட்டுதல் கூட்டம் பாஜக மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு சாமிநாதன் அவர்கள் தலைமையில் ஜெயராம் திருமண நிலையத்தில் நடைபெற்றது பாஜக தேசிய பொதுச்செயலாளர் திரு தருண் சவுக் சிறப்பு அழைப்பாளராக  கலந்து கொண்டார்நடைபெற்ற  கூட்டத்தில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு நமச்சிவாயம் பாராளுமன்ற உறுப்பினர் திரு செல்வகணபதி பாஜக மாநில பொதுச் செயலாளர் திரு மோகன் குமார் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு ஜான் குமார் திரு ராமலிங்கம் திரு வெங்கடேசன் திரு அசோக் பாபு பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர்கள் திரு செல்வம் திரு தங்க  விக்ரமன் திரு அருள்முருகன் திரு முருகன் திரு  GNS ராஜசேகர் மாநில செயலாளர்கள் திரு நாகராஜ் திரு அகிலன் திரு ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில்கட்சியைபலப்படுத்தும்வகையில்பூத்கமிட்டிஅமைக்கப்பட்டுநிர்வாகிகள்பொறுப்பாளர்கள்நியமிக்கப்பட்டுள்ளார்கள்.அதன்படி புதுச்சேரியில் உள்ள அனைத்து பூத்துகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று பூத்துகள் உள்ளடக்கிய சக்தி கேந்திர  தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு செயல்படுவதற்கான வழிகாட்டுதல் கூட்டம்  நடைபெற்றது.புதுச்சேரி மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற தலைவர் திரு சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக தேசிய பொதுச் செயலாளர்  தருண் சவுக் மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நாட்டு மக்களுக்கு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து விரிவாக நிர்வாகிகள் மத்தியில் எடுத்து கூறினார்.மேலும்
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு பூத்துகளையும் வலிமையானதாக அமைக்கப்பட வேண்டும் அது மட்டுமல்லாமல் வருகிற 10-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை அனைத்து பூத்து நிர்வாகிகளும் கூட்டம் நடத்தி கட்சியை வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.மேலும் பாஜகவில் எந்த கட்சியில் இல்லாத அளவிற்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நலத்திட்டங்களையும் பெண்களுக்காக மத்திய அரசு செய்து வருகிறது அதனால் தான் பாஜகவில் அதிக பெண்கள் இடம் பெறும் வகையில் வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட  அவர் அனைத்து இன மக்களும் முன்னேறும் வகையில் அனைத்து திட்டங்களையும் பாஜக அரசு செயல்படுத்தி வருவதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் திரு தருண் சவுக் அவர்கள் நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *